வெள்ளி, 22 ஏப்ரல், 2011

வாடிய ஓர் மலையகச் செடி மலர்ந்தது....

தேயிலைச் செடிகளின் பக்கத்தில் அந்தப் பெண்கள் குந்திக் கொண்டிருந்தார்கள்.கூடையைத் தோளிலே வைத்துக் கொண்டு முனியம்மா தீடிரென எழுந்தாள்.குடத்தை கீழே இறங்கி வைத்துக் கொண்டு முனியம்மாவுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த அன்னம்மா,இவள் எழுந்து நிற்பதைப் பார்த்து குடத்தை  இடையில் வைத்தவளாய் தானும் எழுந்து கொண்டாள்.வானின் நீலவர்ணத்தைக் கண்டு பொறாமைப் பட்டாற் போல ஒரு கருமுகிற் கூட்டம் திரண்டு வந்து கொண்டிருந்தது.இதைப் பார்த்த முனியம்மாவுக்கு நெஞ்சு திக்கென்றிருந்தது.வீட்டு நினைவு வரவே அவள் அன்னம்மாவுடன் கதைப்பதை நிறுத்தி விட்டு எழுந்து கொண்டாள்.கடவுளே பெரிய மழை வரப்போகிறதே;என் பிள்ளைகளை நீதான் காப்பாத்தனும் என்று கலங்கிய கண்களுடன் தெய்வத்தை வேண்டிக் கொண்டாள்.முன்னே தோட்டத்துரையின் பெரிய பங்காள பளிச்சிட்டது அதைப் பார்த்ததும் பேறு மூச்செறிந்த முனியம்மா வெறும் மண் குடிசை கூட இருந்தும் தமக்கு அவை உருப்படியாக இல்லாமல் இருக்கிறதே என்று ஏங்கினாள்.இந்த மழை வந்தாள் வீடு வெள்ளமாய்ப் போகும் என்று நினைத்துக் கொண்டு அவசர அவசரமாக வா;அன்னம் போகலாம் என்று அழைத்தாள்.முனியம்மா;நீ பிள்ளைகளை நினைத்துக் கவலைப்படுகிறாயா?இந்த லயன்களில் எல்லாக் குடும்பமும் இந்த வர்ணபகவானின் அருளைப் பெறத்தான் வேண்டும்.மழை வந்தாள் நீ மட்டுமா உன் பிள்ளைகள் மட்டுமா?எத்தனை ஓட்டைகள் குடிசைகள்?பெரு மூச்சு விட்டாள் அன்னம்மா: நான் கூட தொழில் இல்லாமல் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தோட்டத்தில் ஒரு கூலி வேலைக்காக எத்தனை துயரப்பட்டிருந்தேன். நாம் ஏழைகள் தானே முனியம்மா என்று ஆறுதல்படுத்தி நடந்து கொண்டிருந்தாள்.இல்ல அன்னம் வீட்டில பிள்ளைகள் பட்டினி அதோட மழையும் வந்து முடிக்க முடியாமல் முனியம்மாவின் குரல் தள தளக்க கண்களும் கலங்கியது அன்னம்மாவுக்கு மனதை வேதனை கவ்வியது தன்னைப் போல ஒரு ஏழை படும் பாட்டை அவளால் உணர முடிந்தது.தன்னருகே முந்தானையால் கண்களைத் துடைத்த படி வந்த முனியம்மாவை தேற்றினாள்; முனியம்மாவின் கண்ணீரைக் கண்டோ என்னவோ கூடி வந்த கருமுகில்களைக் காற்று கலைத்து வானத்தைப் பழையபடி நீல நிறமாக்கிக் கொண்டிருந்தது.மழை சாடையான தூறலுடன் நின்று விட்ட மகிழ்ச்சியில்  இருவரும் தோட்டத்தில் இருந்த ஒத்தாப்பில் அமர்ந்தனர்.அப்போது தான் ஒரு குடிகாரன் மிக்க போதையில் வெறியோடு தள்ளாடித் தள்ளாடிக் கொண்டே வந்தான்.அன்னம்மாவினால் அவனை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை.அதோ பார்த்தியா அன்னம் அவன் தான் என் புருஷன் என்று முனியம்மா சொல்லவும் அவளால் இவளின் பரிதாபத்தைப் பார்க்கவே முடியவில்லை.தினமும் இப்படியே இவன் குடிச்சிட்டு வாரான்.கொழந்தைகளுக்கு எதுவுமே கொடுக்க அஞ்சு காசுக்கு வழியில்லாம நேத்து ராத்திரிக்கு முதல் ராத்திரி பக்கத்து வீட்டு பார்வதிகிட்ட பத்து ரூபா கடனைக் கேட்டேன்.அவ புருஷன் நேத்து அத வாங்கிட்டு வாடின்று பார்வதியை அடிச்சிருக்கான்.நான் என்ன பண்ணுவேன்னு தெரியல்லயே இவன் ஒரு புருசனா என்று புலம்பினாள் முனியம்மா.துரையின் தோட்டத்தில் எதாவது வேலை கிடைக்கலாம் என்ற எண்ணத்தில் தான் இருவரும் வெகு நேரமாக தோட்டத்தில் குந்திப் பேசிக் கொண்டிருந்தனர்.நீண்ட நேரங்களுக்குப் பின்னே கங்காணி வந்து அவர்களை அழைத்தான்.மிகவும் மகிழ்ச்சியுடன் ஓடினால் முனியம்மா.அவளைத் தொடர்ந்தாள் அன்னம்மா.கங்காணி சொல்லிய அந்த வேலையைச் செய்யத் தயங்கினார்கள்  இருவரும் இது எவ்வளவு சிரமம்.ஒரு மணித்தியாலத்துக்குள் ஆண்களாலேயே செய்ய முடியாத வேலையை நாம் எப்படிச் செய்வது?யோசித்தபடியே 'என்ன கங்காணி......ஆண்கள் செய்யும் இந்த வேலையை அதுவும் ஒரு மணித்தியாலத்திற்குள் எப்படிங்க செய்வோம்?அவர்கள் கேட்டனர்.உண்மையிலே கங்காணி சொன்னா வேலை மிகவும் கஷ்டமானது தான்.அவனின் பங்களாவைக் கழுவி சாமான்களெல்லாம் ஒரு ரூமிற்குள் வைத்துவிட்டு விரைவில் தண்ணீரின்றிக் காய்வதற்கு வசதியாக நிலத்தைத் துடைக்க வேண்டும்.'ம்.......அப்பாடி'பெருமூச்சுவிட்டாள் அன்னம்மா.முனியம்மாவுக்கு பார்வதியிடம் வாங்கிய கடனையாவது கொடுக்கலாமே என்கின்ற ஆவல்.கணக்கப்பிள்ளை தங்கராஜா விரைந்து வந்தவர் கங்காணியை  பார்த்து வேறு ஆண்களை இந்த வேலைக்கு அனுப்பி விட்டு இந்தப் பெண்கள் இருவரையும் புதிய மலைக்கு அனுப்பு கொழுந்துல நேர ரொம்ப மோசம்.பிச்சி புடுங்கி உள்ளது என்றார்.இருவருக்கும் பாரச்சுமை கழிந்தது.விரைவாக கொழுந்துகளைக் கிள்ளிக் கொண்டிருந்தார்கள்.மூன்று மணிக்குத் தொடங்கிய வேலைகள் ஐந்து  மணியைத் தாண்டியும் ஒரு பத்து நிமிஷத்தையும் சேர்த்துக் கொண்டது.தலை கனக்கக் கொழுந்து கொண்டு வந்து இருவரும் கொட்டினார்கள்.குறைந்தது முப்பது கிலோவாவது இருக்கும்."இருந்தா துண்டு;கனக்கப் பிள்ளையிடம் கொடுத்து சம்பளத்தை வாங்கிக் கொண்டுபோங்கள் என்றார் கங்காணி.சம்பளப் பணம் கிடைத்தது.ஆளுக்கு முப்பது ரூபாய்."இது என்ன அநியாயம் கணக்குப் பிள்ளை?"என்று பதறினாள் முனியம்மா .என்ன ஒருவருக்கு பத்து கிலோ அவளுக்கு எல்லாம் இருவது கிலோ கூறியபடி கணக்குப்பிள்ளை என்றார்.வேலைக்கு ஏற்ற பணம் தந்திருக்கு என்று போய்விட்டார்.அவரைப் பின் தொடர்ந்து காலில் விழாத குறையாய் இன்னும் பத்து பத்து ரூபாய் கொடுக்கும்  படியும் ,நிறை சரியாக நிறுத்தி தராசைப் பார்க்காமல் துண்டு கங்காணி தந்த தாகவும் இருவரும் வாதாடினார்கள்.......இல்லை கெஞ்சினர்.கங்காணி மசியவில்லை. முனியம்மாவின் கண்கள் கலங்கின.அப்பணத்தைப் பட்ட கடன் கொடுபதா? சாப்பிடுவதா என்று அவளால் நிர்ணயிக்க முடியவில்லை.அன்னம்மாவின் கணவனும் உழைப்பதனால் அவளுக்குக் குடும்பச் செலவு தெரியவில்லை என்றாலும் அவளும் வறுமையைச் சந்திப்பவள் தான்.ஆனாலும் தன் தோழி முனியம்மா படும் துயரத்தைக் காணச் சகியால் தனக்குக் கிடைத்த பணத்தையும் கொடுத்து "முனியம்மா,நீ இதைப் எப்போதாவது திருப்பித்தா.........ஏழைகளை ஏழைகளால்தானே புரிய முடியும்.உன் குழந்தைகளுக்கு சமைச்சிப் போடு" என்று பெரிய மனதோடு முப்பது ரூபாவைக் கொடுத்தாள்.முனியம்மாவினால் அந்த உதவியை மறக்க முடியவில்லை.நன்றி கலந்த பார்வையுடன் அன்னம்மாவைப் பார்த்து விட்டு அவசர அவசரமாக வீடு திரும்பினாள்.

செவ்வாய், 19 ஏப்ரல், 2011

எரிந்து விழுந்த மனசு...!!!

"ஐயோ...வாப்பா...என்ன தனியா விட்டுட்டுப் போகாதீங்களே....வாப்பா....வாப்பா...நானும் ஒங்களோட வாரன் வாப்பா....போகாதீங்கோ வாப்பா...." ஸமீனாவின்  அலறல் அங்கிருந்தோரை கலங்கச் செய்தது.சிறு வயதிலையே உம்மாவைப் பரிகொடுத்த அவளுக்கு வாப்பாவின் திடீர் மறைவை தாங்கவோ தாளவோ முடியவில்லை;பொங்கி வந்த துயரவெள்ளத்திற்கு அணை போட முடியாமல் கதறிக் கதறி அழுதாள்.அப்போ அவளது யாரோ ஆறுதலாகத் தடவியதைக் கண்டு கண்ணீர் மல்க நிமிர்ந்தாள்.நீரோடு கூடிய மங்களான பார்வையில் பக்கத்து வீட்டு நிஸாம் ஹாஜியாரும்,மனைவி பஸ்லியாவும் நின்று கொண்டிருந்தார்கள்.அவர்களைக் கண்டதும் அவளது ஓலம் மேலும் பெரிதாய் வெடித்தது."மாமி....மாமி....நான்...நான்...அநாதையாகப் போயிட்டன் மாமி...." அவளது உதடுகள் துடித்தன,சொற்கள் வெளியே வர முடியாமல் தடுமாறின."அப்படிச் சொல்லாதீங்க ஸமீனா....ஒங்கலப் பார்த்துக் கொள்ள நாங்க இருக்கிறோம் ....கவலய விடுங்க....ஒங்கல எங்கட சொந்த மகளப் போல பார்த்துக்கிறது எங்களோட பொறுப்பு...."அடுத்த வீட்டு பஸ்லியா மாமியின் பேச்சு அவள் உடம்பை சிலிர்க்க வைத்தது;மனதை நெகிழவைத்தது;அப்படியே அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டு குழுங்கத் தொடங்கினாள் ஸமீனா.ஸமீனாவின் மாமி தான் ஹஸன் முதலாளி;தனது சகோதரியான ஸமீனாவை திருமணம் செய்து வைக்கும் போது வீடுகட்டித் தருவதாக வாக்களித்தே அதனை முடித்து வைத்தார்.அதுவரையில் புதுமணத் தம்பதிகளுக்கு தனது வீட்டிலேயே தங்கலாம் என சொல்லி விட்டார்.கடவுள் நினைத்தாலும் பூசாரி இடம் கொடுகாதது போல அவரது எண்ணத்தின் குறுக்கே சீனப் பெறும் சுவர் போல நின்றாள் மனைவி நஸூஹா . "ஒங்களுக்கு என்ன புடிச்சிருக்கு.....போயும் ...போயும் ....எங்கேயோ  போகிற பஞ்சப் பிராணிகள் எங்கட வீட்டுல நிறுத்திறதா.....ஒங்களுக்கு என்ன மூளகீள குழம்பிட்டுதா....இது எங்க வாப்பா கட்டித் தந்த வீடு....நீங்க செய்ற கடை எங்கட வாப்பாட கட...இந்த சொத்து சுகம் எல்லாம் நான் கொண்டு வந்தது.ஒங்கட தரித்திரம் புடிச்ச குடும்பத்துக்கு அனுபவிக்க எங்கட சொத்தா பழி.....இந்த நிமிசமே அவங்க வெளியேறணும்...இல்ல நான் ஏன்டா புள்ளைங்களோட வெளியே போயிடுவேன்...."ஹஸன் முதலாளி ஆடிப் போய்விட்டார்.மனைவிக்குப் பயந்த பொட்டிப்பாம்பு அவர்.எதிர்த்தா? பேச முடியும்.எதோ கெஞ்சிக் கூத்தாடித்தான் அவளைப் பணிய வைக்க முடிந்தது.என்றாலும் அவரது மனைவியின் போக்கில் எந்த வித மாற்றமோ தோற்றமோ இல்லை.ஸமீனாவின் உம்மாவை குற்றம் காண்பதே அவளது பொழுது போக்காகிவிட்டது.இருந்தால் கதை எழுந்தால் உதை என்கிறது போல அவளது காட்டு தர்பார் வீட்டுக்குள்ளே வீர நடை போட்டது.பாவம்,ஸமீனா வாயில்லாப் பூச்சு.எதையும் தாங்கிக் கொண்டாள்;அடங்கிக் கொண்டு தனக்குள்ளேயே மாய்ந்து போனாள்.இதற்கிடையில் ஸமீனா பிறந்ததும் நஸூஹாவின் அட்டகாசம் எல்லை மீறியது;குத்தல் வார்த்தைகள் அமெரிக்கன் ஏவு கணைபோல அவள் மென் நெஞ்சத்தைத் துளைத்தது.பச்சிளம் பாலகன் என்று கூடப் பாராமல் ஸமீனாவுக்குக் கூட எவ்வளவோ அநியாயம் செய்தாள்.குழந்தை கூடுதலாக சாப்பிட்டால்-குடித்தால் கூட முழு சொத்தையும் விழுங்கி ஏப்பம் விடுவதாகக் கத்தினாள்;சண்டைபோட்டாள்.இதை எண்ணி எண்ணி உருக்குலைந்து நடைபிணமாகிப் போனவள் ஸமீனா பத்து வயதாக இருக்கும் போதே மாரடைப்பாள் பட்டென்று போய் விட்டாள்.அப்புறம்
 ஸமீனாவையும் தந்தையையும் வீட்டை விட்டே துரத்தி விட்டாள் நஸூஹா.அங்கிருந்து வெளியேறிய ஸமீனாவின் தந்தை நிஸாம் ஹாஜியாரின் பக்கத்து வீட்டிற்கு வந்து குடியேறினர்.ஸமீனாவின் மழலைப் பேச்சு குழந்தை இல்லாத அவர்களைக் கிறங்கச்  செய்தது.ஸமீனாவின் அதிக பொழுது நிஸாம் ஹாஜியார் வீட்டிலேயே கழிந்தது.மிக சீக்கரத்திலேயே இரு குடும்பமும் நெருக்கமாகிவிட்டன.ஸமீனா உயர்தரப் பரீட்சை எல்லாம் முடிந்து கவலைகளை மறைந்திருந்த போது தான் தந்தையின் திடீர் மறைவு அவளை இடியாகத் தாக்க,ஆடிக்காற்றில் சிக்குண்ட துரும்பாய் மாறினாள்.நல்ல காலம் - திசை தெரியாது தவித்த அந்தத் துரும்பை நிஸாம் ஹாஜியாரும் - மனைவியும் பொறுப்பேற்று விட்டார்கள்.க.பொ.த. உயர்தர பரீட்சை முடிவுகள் பாடசாலை அறிவுப் பலகையில் தொங்கின.ஸமீனா விஞ்ஞானத் துறையில் மிகத் திறமையாக சித்தியடைந்திருந்தாள்.நாட்காட்டி சில நாட்களை புறங்காட்டி ஓடச் செய்ய பல்கலைக்கழகம் புகும் நாளும் நெருங்கி விட்டது.பல்கலைக்கழகச் சூழல் அவள் புருவங்களை முடிச்சுப்போட வைத்தன.அங்கே எல்லாமே அதிசயம் -வியப்பு-மலைப்பு! ஆண் பெண் வித்தியாசமின்றி மாணவர்கள் பழகுவதைக் கண்டு கூசிப் போனாள்."ரெகிங்" என்ற பெயரில் நடைபெறும் அநாகரிகச் செயலை வெறுத்தாள்.தனது கிராமச்  சூழலுடன் ஒப்பிடும் போது வாஸிடி வாழ்க்கை அவளுக்கு விநோதமாகவே இருந்தது.ஆண்களை ஏறெடுத்துப் பார்க்கவே கூசும் அவள் சில ஆண்களின் முரட்டுப் பார்வை கண்டு தடுமாறிப் போனாள்.அவர்களின் கிண்டல்களில் நொந்து அவள் உள்ளம் மண்டியிட்டது.ச்சே....இது தானா பல்கலைக்கழகம்.......இதுவா படிப்பு என்று முதல் இரண்டு மாதமும் மனத்துள் அழுந்திப் போனாள்.ஆனால்,நாட்கள் செல்லச் செல்ல அந்த மாணவர்களின் தூய உள்ளம் அவளுக்குப் புரிந்து விட்டது.தங்களுக்குள் ஏதும் நடந்து விட்டால் ஒற்றுமையாகின்ற அந்த வேகம் - தனது சகாவுக்காக எதையும் செய்யத்துணிகின்ற தீவிரம் - அநியாயங்களை அநீதிகளைக் கண்டு அஞ்சாமல் துணிந்து எழுகின்ற வீரம் - பெண்களை சமமாக மதித்து அவர்களை முன்னுக்குக் கொண்டுவர செய்கின்ற ஆர்வம் - தான் இதுவரை அந்த நல்ல உள்ளங்களை நுனிப்புல் பாங்கில் அளந்த அந்த செயலுக்காக அவள் அடிக்கடி தனக்குள் வருந்தினாள்.இப்போது அவர்களுடன் சகஜமாகப் பழகினாள்அந்த வட்டத்துக்குள் இந்தத் துளி சங்கமமாகிவிட்டது.அன்று விரிவுரை இல்லாததினால் வாசிக சாலையில் உட்கார்ந்து மூ.மேத்தாவின் "என்னுடைய மோதிரங்களைக் "குடைந்து கொண்டிருந்தாள் ஸமீனா.அருகே நிழலாடியது.நிமிர்ந்து பார்த்தவளின் முகத்தில் சூரியப் பிரகாசம்.எதிரே நவ்ஷாத் நின்று கொண்டிருந்தான்.பல்கலைக்கழகத்தில் 'ஹீரோ'வாக பவனி வந்தவன்.சுருள் சுருளான கம்பிவளையல் போன்ற கேசங்கள் நெற்றியில் புரண்டு அவனுக்கு தனியான அழகை ஊட்டியது.அவனது நாகரிகமான உடை நடைப் போக்குகளில் தனிக்கவர்ச்சி தெரிந்தது.ஆங்கிலம் அவனது நாவில் கொஞ்சி விளையாடியது.சகல துறைகளிலும் வல்லவனாகத் திகழ்ந்தான்.கலா மன்றங்களில் அவன் பேச்சில் "சேர்ச்சில்"மறைந்து நின்றார்.அவனது குரலில் பாலசுப்ரமணியம் நினைவுக்கு வந்தார்.அவனது கட்டுடல் யாரோ ஒரு ஹிந்திக் கதா நாயகனை மனதுக்குள் எழுப்பி நிற்கும்.பல்கலைக்கழகத்தின் சங்கப்பலகை மாணவர்களின் ஆக்கங்களுக்கு ஊக்கம் கொடுக்கும் சிங்கப் பலகை! மாணவர்களின் கருத்துச் சுதந்திரத்திற்கு கை கொடுக்கும் சுந்தரப் பலகை. ஒரு தடவை நவ்ஷாத்"பதில் தருவாயா"என்ற தலைப்பில் ஓர் உணர்ச்சி பூர்வமான புதுக் கவிதையை எழுதி ஒட்டி விட்டான். அதைக் கண்ணுற்ற ஸமீனாவும் வேடிக்கையாக "இதோ பதில்" என்ற தலைப்பில் மரபுக்கவிதையை போட்டு விட்டாள்.அந்தப் பதில் கவிதையின் மணிப்போன்ற நயமான கவிதை வரிகள் நவ்ஷாதை வெகுவாக ஈர்த்து விட்டது.இப்படியாக சங்கப்பலகையில் மோதியவர்கள் தங்கள் உள்ளத்துக்குள்ளும் மோதிக் கொள்ள அவர்களுக்கிடையே பேரும் நெருக்கம் வந்துவிட்டது.ஸமீனாவை சந்திக்க வரும் நிஸாம் ஹாஜியாருக்கும் விஷயம் சொல்லமலேயே புரிந்துவிட்டது. ஸமீனா போன்ற அனாதைகளுக்கு நவ்ஷாத் போன்றோரின் பிணைப்பு மிகப் பொருத்தமான தென்றே நினைத்தார்.தனது மனதிலுள்ள நோக்கத்தை நவ்ஷாதிடம் சொன்னதும் அவன் ஒரு கணம் திகைத்துப் போய்விட்டான்."அங்கள்...நான் யாருமற்ற அநாதை....எனது தாயின் அயராத முயற்சியால தான் நான் இந்த நிலைக்கு வந்தான்...எனது உயர்ச்சியைக் கூட பார்க்க எனது உம்மாவுக்கு கொடுத்து வைக்கல்ல......அதோட எனக்கென்று சொந்தமா ஒரு வீடு கூட இல்ல .....இப்படியான நிலைமையில் பெரும் பணக்கார வீட்டுப் பிள்ளையான ஸமீனாவை நான் கல்யாணம் கட்டுறதா நெனச்சிக் கூட பார்க்க  முடியாது.நான் சொந்தமாக உழைச்சி முன்னேறின பிறகு தான் ஸமீனாவ கட்ட நெனச்சன்......" மனத்துள் உள்ளதை அப்படியே கொட்டி விட்டான் நவ்ஷாத்.நிஸாம் ஹாஜியார் அவனது நல்ல உள்ளத்தை பார்த்து சிலிர்த்து போனார்."நவ்ஷாத் ஸமீனாவும் உங்களப் போல அநாததான்.....நான் அவட வாப்பா இல்ல...என்றாலும் என்னோட சொந்த மகள் மாதிரி ஸமீனாவ பார்த்துவாரன்.......என்னோட முழுச் சொத்தும் அவளுக்குத் தான்....ஒன்கிட்ட சொத்து இல்லேன்னு கவலப்படல்ல....அழியாச் சொத்து கல்வி இருக்கு தானே....அது போதும்...அதோட நீங்க டொக்டராக வரப்போறீங்க.....அது ஸமீனாவோட அதிஷ்டம்....உங்கட படிப்பு முடிஞ்சதும் கல்யாணத்த நடாத்தி வைக்கிறன்.....கவலப்படாதீங்க....."சொல்லி விட்டு காரில் ஏறினார் நிஸாம் ஹாஜியாரை கண்ணீர் மல்க பார்த்துக் கொண்டிருந்தான் நவ்ஷாத். ."என்ன...ஒரேயடியா....யோசனைல மூழ்கிப் போயிட்டீங்க......என்ன விஷயம்..."சிந்தனை களைந்து நிமிர்ந்த நவ்ஷாத் ஸமீனாவைப் பார்த்து கனிவோடு சிரித்தான்.அவளும் சிரித்தாள்.திருமணம் முடிந்து ஸமீனாவும் நவ்ஷாதும் ஒரே ஆஸ்பத்திரியில் கடமை புரிந்தனர்.வாரத்தில் ஒரு முறை அகதி முகாமுக்குச் சென்று அங்குள்ள நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை செய்து வந்தனர்.அதைப் பெரும் பாக்கியமென நினைத்தனர்.அன்று ஸமீனா அரைநாள் விடுப்பில் வீட்டுக்குப் போய் விட்டாள்.நவ்ஷாத் மாத்திரம் தனியே அகதி முகாம்களை கவனிக்கப் போனான்.அப்போது ஒரு பெண்மணி அவரைத் தொடர்ந்து வந்து "தூர...அண்மையில் நடந்த கலவரத்தில் என்னோட குடும்பத்தில் இருந்த அனைவருமே பலியாகிட்டாங்க.....நான் மட்டும் தான் மிச்சம்....நான் ரொம்ப செல்வச் செழிப்போட கொடிகட்டிப் பறந்தவ.....இப்போ ஒரு கொடி கட்டக்கூட வக்கில்லாம இருக்கிறன் தொர.....ஒங்கட முகத்தப்பார்த்தா ரொன்ப நல்லவர் போல தெரியுது.....எனக்குத் தெரியுது....எனக்குத் தனிய  இந்த அகதி முகாம்ல இருக்க பிடிக்கல்ல....ஒங்களுக்குக் கோடிப் புண்ணியம் கிடைக்கும்....தயவு செஞ்சி என்னை ஒங்கட வீட்டுக்குக் கூட்டிட்டுப் போங்கோ...ஒங்க வீட்டு வேலைக் காரியாக நான் கடைசி வரையில இருக்கிறன்...."நவ்ஷாத் ஒரு கணம் வீட்டு நிலைமையை யோசித்துப் பார்த்தார். ஸமீனாவுக்கு இப்போது வயிற்ருக்குள் ஆறுமாதம்;கஷ்டப்பட்டு வேலை எல்லாம் செய்ய முடியாது.அவளுக்கு துணையாக இருக்கட்டுமே என்று அந்த பெண்மணியையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்குப் போனார்.காரிலிருந்து இறங்கிய அந்தப் பெண்மணியைக் கண்டதும் ஸமீனா திகைத்துப் போய் நின்றாள்.எப்போதோ கண்ட அறிமுகமான முகம்;தான் பத்து வயதாக இருக்கும் போது வள்..வள்....என்று தன்மீது எரிந்து விழுந்த அந்த முகத்தை இலேசில் மறக்க முடியுமா என்ன? சற்றே கண்ணயர்ந்து தூங்கிவிட்டால் போதும் அப்படியே ஒரு வாளித் தண்ணீரை முகத்தில் அடித்து"அடியேய்.....தருதல பிடிச்சவளே....தண்டச் சோறு தின்னவா இங்கு நிக்குறே.....எழும்புடி மூதேவி...."என்று எரிமலையைக் கக்கிய அந்தப் பிசாசு முகத்தை மறக்கவா முடியும்...?அது தான் மனத்திரையில் எப்போதோ பதிந்து விட்ட முகப்படமாச்சே..."நீங்க...நீங்க...நஸூஹா மாமி தானே...."ஸமீனாவின் வைச் சொல் தடுமாறியது.அந்தப் பெண்மணி அதிர்ந்து போனாள்.நன்றாய் வளர்ந்து தங்க விக்கிரகம் போல தள தள வென்று இருந்த ஸமீனாவை அவளால் அடையாளம் கண்டு பிடிக்கவே முடியவில்லை."மாமி....மாமி...என்னைத் தெரியலியா...நான்...நான்...ஸமீனா...."அந்தப் பெண்மணி அப்படியே ஓடிவந்து ஸமீனாவைக் கட்டிக் கொண்டாள்.அவள் உடல் குலுங்க,கைகள் வெடவெடத்தன,நாத் தழுதழுத்தது."ஸமீனா.....என்னை மன்னிச்சிடுங்க.....மன்னிச்சிடுங்க மக.....நான் ஒங்க குடும்பத்துக்கு எவ்வளவோ துரோகம் செஞ்சன்....உங்க பிஞ்சு மனச புரியாமல் நஞ்சுத் தனமாக நடந்துகிட்டன்.....அந்த அநியாயம் தான் இப்போ அனுபவிக்கிறன்....உங்கள எல்லாம் அகதிகளைப் போல விரட்டினன்.....அல்லாஹ் இப்போ என்னையே அகதியாகிட்டான்....என்னை மன்னிச்சிடுங்க...."ஸமீனாவைக் கட்டிக் கொண்டு அழுதாள்.ஸமீனாவுக்கும் கண்கள் புடைந்தன.அந்தக் காட்சியை ஆச்சிரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார் டொக்டர் நவ்ஷாத்....

திங்கள், 18 ஏப்ரல், 2011

இணையந்த இதயங்கள்.....

"வாழ்கையில் துன்பம் வருவது இயற்கை அதை நான் மறுக்க வில்லை.ஆனால் தொடர்ந்து துன்பம் தான் வாழ்க்கையாகி விட்டாள்...வாழ்வதில் என்னடி அர்த்தம்....?"
பரீனா,வாழ்க்கை பூராகவும் நீ துன்பத்தைத் தான் அனுவிக்க வேண்டுமென்று இறைவன் தலையில் எழுதியிருந்தால் ,அதை நானோ,நீயோ தடுத்து நிறுத்த முடியுமா என்ன? "ஓடும் நதி வழியே ஒருத்தி மட்டும் விதி வழியே" என்று கவிஞர் கண்ணதாசன் எழுத எண்ணினாராம்.ஆமாம் விதி வழி என்ற ஒரு வழி இருக்கத்தான் செய்கிறது.அதனை 'இறைவழி' என்று அழைத்தாலும் பிழை இல்லை என்றே எண்ணுகிறேன்.எனவே எந்த நேரத்தில் எது வந்தாலும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு வாழ்வது தாண்டி வாழ்க்கை.ஆகவே நாம் தான் நாம் மனத்தைப் பண்படுத்திக் கொள்ள வேண்டும்."அப்போ,கால மெல்லாம் கண்ணீர் வடித்துக் கொண்டு அவரோடு வாழ்வதற்காக  என்னை அவரையே  திருமணம் செய்யும் படி சொல்கியாய்"...?பரீனா பரிதாபமாகக் கேட்டாள்."என் உடலில் என் உயிர் உள்ளவரை என்னிதயத்திலிருந்து எந்தச் சக்தியாலும் உன்னைப் பிரிக்கவே முடியாது....உன்னைத் தவிர வேறு ஓர்  ஆடவனின் நிழல் கூட என்னில்படுவதை ஒரு போதுமே விரும்பமாட்டேன் என்று,அன்று ஞாயிற்றுக் கிழமை பகலைக்கழக கேட்போர் ஹோல் மண்டபத்தில் வைத்து நஜீமிடம் சொன்னவற்றை இன்று கனவாக நினைத்து  மறந்து போய் பேசுகின்றாய் என்று நினைக்கின்றேன்,அன்று இதயத்திலே பாசம் படரும் போது சத்திய வாக்கை பனித் துளியாக தூறினாயே நட்பு மலர் காதலாக செழித்து இல்லற வாழ்வில் நறுமணம் நல்லறமாக வீசவேண்டுமென்று  எதிர் பார்த்தாயே ஆனால் அது இன்று உனக்கெங்கே ஞாபகத்துக்குவரப் போகுது  எல்லாமே காற்றோடு காற்றாக பறந்துவிட்ட தூரியாகிவிடாதே.இர்பானா கிண்டலாக பேசினாள்."இர்பானா,என் என் நிலைமையை உணராமல் ஏண்டி இப்படியெல்லாம் பேசுகின்றாய்.நீ தான் பரீனா உன் நிலைமையை உணராமல் மூடத்தனமாக நிதானமிழந்து பேசுகிறாயா?" "பரீனா,கொஞ்சம் சிந்தித்துப்பார்.நஜீம் வசதியாக இருந்த போது அவருக்கு காதலியாக இருந்து விட்டு  இப்போ நீ ஓர் டாக்டராக மாறிவிட்டாய் என்பதற்காக அவரை விட்டு விலகி வாழ்கிறாயே மரம் விட்டு மரம் தாவும் குரங்குக்கும் உனக்கும் என்னடி வித்தியாசம்.இர்பானா சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் பரீனாவின் உள்ளத்தை கரையான் அரிப்பது போல அரித்தது.பலகலைக் கழக படிப்பை முடிந்தவுடன் திருமணம் செய்து கொள்ளத் துடியாத் துடித்தவர்களை,பெற்றோர் பிரித்து வைத்தார்கள்.பரீனா,பெற்றோரின் கட்டுப் பாட்டுக்குளிருந்து மட்டக்களப்பு  ஆதார வைத்தியசாலையில் டாக்டராக பணி புரிந்து கொண்டிருந்தாள்.நஜீம் எதிர்புகளுக்கிடையில் பெற்றோரின் கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்து விட்டு தனிமையில் வாழத் தொடங்கினான்.ஆமாம்;நஜீம் கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் ஆசிரியராகப் பணிபுரிந்தான்.பரீனா நஜீம் இருவருக்கிடையில் கடிதத் தொடர்புகளுமின்றி ஒருவர் நினைவில் ஒருவர் வாழத் தொடங்கினார்கள். இன்பமே நிறைந்திருந்த அந்த இளஞ்ஜோடிகளின் இதயத்தில் திடீரென்று ஒரு நாள்,துன்பம் தடவிப் பார்த்தது.நஜீம் பரீனாவின் தற்காலிகப் பிரிவு தாங்கமுடியாமல் அல்சரா புகைப்பதில் பெரிதும் ஈடுபாடு கொண்டார்.இதன் விளைவு வயிற்றில் புண்களை உருவாக்கியது.திரும்பத் திரும்ப புகைத்ததால் அல்சராக் கூடி கடுமையாக பாதிக்கப்பட்டான். இதனால் அவமதிக்கப்பட்டுக் கொண்டிருந்த நஜீமை அவனது பெற்றோர் உடனடியாக மட்டக்களப்பு ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக அனுமதித்தார்கள்.பரிசோதனை செய்வதற்காக வாட் நோக்கி வந்த பரீனா நஜீமின் நிலைமையை அறிந்து மனவேதனைப்பட்டாள் பனித் துளிகளைப் போல் கண்ணீரை தாவினால். நண்பி என்ற முறையில்,இர்பானாவிற்கு தன்னால் இயன்ற  உதவிகளையெல்லாம் செய்து வந்தால் பரீனா.தன்னோடு ஓர் தாதியாகவும் சேர்த்துக் கொண்டாள்.நஜீம் மீது உயிரையே வைத்திருந்த பரீனா. அவரது கீழ்த்தரமான இந்தச் செயலை நினைத்து நினைத்து இரவு நேரங்களில் தலையனையை ஈர மாக்குவதுடன் சுடுமணலில் துடிக்கும் புளுவைப் போல் துடித்தாள்.உடல் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாத நஜீம் அவள் காதைப் பிடித்து கட்டிலுக்கு அழைக்கும் போதெல்லாம் அவரது மூளைக்கு அதிகம் வேலை கொடுக்கக்கூடதென்பதற்காக விலகிப் போவாள் சில நேரங்களில் தன்னையும் மறந்து நஜீம் மீது கோபமடைவாள். நாளமையில் அவனது உடல் நிலை பரீனாவிற்கு தாங்க முடியாத துயரத்தையும்,சிந்தனைகளையும் ஏற்படுத்தியது.தன் வாழ்க்கை சோகமான வரலாறாகிவிட்டதாக நினைத்தாள்.கடைசியில்,நஜீம் நினைவை விட்டு விலகி தனிமையில் வாழ முடிவெடுத்தாள்."இர்பானா நீ என்ன சொன்னாலும் சரிடி;நான் எடுத்த இந்த இறுதி முடிவை நான் ஒரு போதும் மாற்றிக்கவே மாட்டேன்டி". "பரீனா .....இப்பத்தாண்டி தெரியுது ....உன் நஜீமை விட்டு விட்டு எதுக்காக நீ ஓர் இறுதி முடிவு எடுத்துள்ளாய் என்பது. எப்படியாவது நஜீம் மூளைக்கு அதிகமான வேலை கொடுக்காமல் அவரை பழைய நிலைக்கு மாற்ற வேண்டுமென்ற என்ற எண்ணம் உனக்கு இருக்கு. தானும் மாற வேண்டுமென்ற எண்ணம் அவருக்கும் உண்டு.இவர் இனி பிழைத்து மனிதராக மாட்டாரோ என்று நீ நினைத்து இப்படி ஓர் முடிவை எடுத்துக் கொண்டாயோ? "அப்படியொரு எண்ணம் என் மனதில் இருந்திருந்தால் எப்பவோ நான் அவரைவிட்டு விலகி என் பெற்றோர் பேசி பிடிவாதமாக கட்டிக் கொள்ளும்படி கூறும் சொந்த மச்சானை திருமணம் செய்திருப்பேன். இத்தனை வருடகாலமாக இவருக்காக நான் இப்படி வாழ்ந்திருக்கவே மாட்டேன்".பரீனா சொல்லி முடித்து தலை நிமர் தாதி ஒருவர் வந்து அழைத்தாள்.பரீனா எழுந்து சென்று நஜீமை பார்க்கச் சென்றாள்.நஜீம்;"பரீனா ,என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என் வருத்தம் நல்லாச் சுகமாகி விட்டது.வீட்டுக்குச் செல்ல ஆசைப்படுகின்றேன்.என் டிக்கட்டை வைத்தியசாலையிலிருந்து கட் பண்ணி விடுங்கள்".சற்று நேர மௌனத்திற்குப் பின் பரீனா சொன்னால் "நஜீம் வசதியான குடும்பத்தில் பிறந்த நீங்கள் சந்தோசமாக வாழ்ந்திருக்கலாமே? நான் உங்களுக்கு என்ன துரோகமா செய்தேன்.இப்பே நீங்களாகவே நோயை தேடிக் கொண்டீர்களே ,திடீரென்று பரீனா பரீனா என அழைக்கும் அழைப்பை கேட்டு திரும்பினாள்.இர்பானா ,என்னடி வந்திட்டியா? ஆமாடி .எப்படி நஜீம் வருத்தமெல்லாம் இர்பானா கேட்டாள் கொஞ்சம் பரவாயில்லை இர்பானா . "பரீனா நஜீம் பாவம்டி உன் பிரிவைத் தாங்க முடியாமல் தான்டி அவர் இந்த நிலைக்கே தள்ளப்பட்டார்.நீதான்டி அவருக்கு நோய் ஏற்பட காரணமாக அமைந்தவள்".இர்பானாவை முறைத்துப் பார்த்தாள் பரீனா அவள் கண்கள் மட்டுமல்ல உள்ளமும் கண்ணீர் வடித்தது."இதோ கேள் பரீனா....நஜீம் என் உடன்பிறந்த தம்பியடி.என் பெற்றோருக்கு இவன் மட்டும் தாண்டி ஆண் செல்வம்.என் தாய் இவனை கண்ணை இமை காப்பது போல் காத்து வந்தாள்.என் தாய் காலமாக  தந்தை இன்னும் ஓர் பெண்ணை திருமணம் செய்து கொண்டவர் இவனையும் கூடவே கூட்டிச் சென்று இந்த நிலைமைக்கு படிக்கவைத்தார்.நான் என் சிறிய தாயிடம் இணைந்து கொண்டேன்.அதனால் எங்கள் இருவரது பாசங்களும் பிரிவில் வாடியது என் தம்பியின் தரத்திற்கும் , என் ஏழ்மையின் நிலைக்கும் இடைவெளிகள் பல.... அதனால் தாண்டி பரீனா என் தம்பியிடம் நான் தாத்தா என்பதை சாட்டிக் கொள்ளவில்லை.உன் மனதை விட மேலாக என் மனம் வேதனைத்தீயில் எரிந்து கொண்டிருக்கிறது.இர்பானா.....அப்போ நீ என் மைனியாடி....?ஏண்டி இத்தனை வருடமும் என்னிடம் மறைத்தாய்....இறுக கட்டிப் பிடித்துக் கொண்டு இர்பானாவின் தலையை தடவிக் கொண்டே   அழுதாள்.இர்பானா என் வாழ்க்கையில் தான்  துன்பமும்,வேதனையும் நிறைஞ்சிருக்கின்னு நினைச்சுக்கிட்டிருந்தேன் அது உன்னுடைய வாழ்க்கையிலேயும் நிறைஞ்சிருக்கு என்பதை இப்போ நான் தெரிஞ்சுக்கிட்டேன். இன்னும் சொல்லப் போனால், துன்பத்தின் மத்தியில் தான் இன்பமே உண்டு  என்பதையும் புரிஞ்சுக்கிட்டேன்......இனிமேல் என்னவரை.ஆமாம் உன் ஆசைத் தம்பி நஜீமை விட்டுப் பிரிந்து ஒரு நிமிடம் கூட விலகி வாழவே மாட்டேன்னம்மா உறுதி.கன்னத்தில் கொட்டிக் கொண்டிருந்த கண்ணீர் துளிகளை துடைத்துக்கொண்டே பரீனா இர்பானாவை அழைத்துக் கொண்டு நஜீமை பார்க்கச் சென்றாள்.இர்பானா நஜீமை கட்டியணைத்துக்கொண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தால் நஜீம் ஒன்றும் புரியாது விழித்தான். பரீனா விடயத்தை விபரமாகச்  சொன்னாள்.இருவர் கண்களிலும் கண்ணீர் வடிந்தோடின. அது ஆனந்தக் கண்ணீர் தான். இர்பானா மீண்டும் நஜீம் சென்று தம்பி. பரீனா ஓர் பெயர் பெற்ற தரமான டாக்டர்.இறைவன் துணையால் அவன் உன் நோயை சுகப்படுத்துவாள்.முதலில் நீ என்னில்லம் போக வா......இரவைக்கே உங்கள் இருவரையும் நான் மனப்பூர்வமாக இணைத்து வைக்கின்றேன்.என்று அன்போடு அழைத்தாள்.பக்கத்து வீதியில் அமைந்திருந்த ஹோட்டலில் இருந்து வானலை ஊடாக....,
                                                            நல்வாழ்த்து நான் சொல்வேன்.........
                                                            நல்லபடி வாழ்கவென்று....
                                                            கல்யாணக் கோயிலிலே
                                                            கணவன் ஓர் தெய்வம்மா......

எனும் பாடல் தவழ்ந்து கொண்டிருந்தது.

ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

கன்னிப் பூவில் காளை வண்டு !!!

றிஸ்வானின்  அழகிய விரல்கள் டைப்ரைட்டருடன் உறவாடிக் கொண்டிருந்தன. மேலே சுழன்ற மின் விசிறியின் செயற்கைக் காற்று அவன் அலை போன்ற கேசத்தைத் தழுவி மேலும் அழகு படுத்தினாற் போல் பறக்க விட்டுக் கொண்டிருந்தது.பக்கத்திலே அவனின் தங்கை நாசிலா குறும்பு பண்ணிக் கொண்டிருந்தாள்.அவசரமான ஒரு கடிதம் ஒன்றை ரிஸ்வான் டைப் செய்து கொண்டிருந்தான். றிஸ்வானின் வேலையைக் குழப்பிக் கொண்டிருந்த நாசிலாவை சிம்ரா ஓடிப் போய் அணைத்துக் கொண்டாள்.நாசிலாவும் அடம்பிடிக்காமல் சிம்ராவோடு ஒட்டிக் கொண்டாள்.அட சிம்ராவா; குழந்தையை அழகாத் தூக்குறியே என்று புன்னகையோடு சொன்னான் றிஸ்வான்.அவனின் அழகிய புன்னகையில் சில நிமிஷம் தன்னையிழன்தவள் ......... இது பெரிய வித்தையா ? பிள்ளையைத் தூக்கத் தெரியாத ஒரு பெண் இருக்க முடியுமா? என்று கூறிவிட்டு உள்ளே சென்று விட்டாள்.சிம்ராவின் அழகான பின்னழகை ரசித்த றிஸ்வான் மீண்டும் வேளையில் மும்முரமானான். றிஸ்வான் டாக்டர் ஷரீபின் ஒரே மகன்.படித்து விட்டு எப்படியெல்லாமோ பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தான். தந்தையிடம் இருக்கும் ஏராளமான சொத்துக்கள் அவன் படிக்கத்தான் வேண்டும் என்ற கொள்கையை மாற்றியது.உத்தியோகம் ,புருசலட்சணம் என்ற இலக்கணத்தைத் தொலைத்து விட்டு வீட்டில் றிஸ்வானோடு தந்தைக்கு கோபம் வராவிட்டாலும் அவன் படித்து ஒரு உத்தியோகம் பார்க்கவில்லையே என்று உள்ளூரக் கவலையாயிருந்து. படித்தவர்களின் பிள்ளைகள் படிப்பதில்லை. இது பல இடத்து நிகழ்வுகள் பணக்கார இடங்களில் செல்வம் அதிகமாகிப் பிள்ளைகள் வழி தவறி விடுவதுண்டு.ஆனாலும் றிஸ்வான் எதோ உருப்படியான வேலைகள் செய்து பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தான். அவனுக்கென்று ஏராளமான சொத்துக்களும் அவன் பெயரில் பெரிய கம்பனி ஒன்றுமிருந்தது.சிம்ரா டாக்டர் ஷரீப் வீட்டு வேலைக்காரப் பெண் . சின்ன வயதிலிருந்தே  அங்குதான்  இருக்கிறாள்.அந்தக் குடும்பத்தில் அவள் வேலைக் காரியாக இருந்தாலும் அன்பாக நடாத்தப்பட்டாள்.தாய்,தந்தை இருக்கிறார்களா இல்லையா என்பது கூட அவளுக்குத் தெரியாது.சொல்லப் போனால் அவர்கள் உருவமே அவள் நினைவில் இல்லை.சிம்ரா;சிம்ரா ஷரீபின் மனைவி அழைத்த ஒலி கேட்டு விரைந்து சென்றாள்.டாக்டருக்கு மூன்று குழந்தைகள். மூத்தவன் றிஸ்வான் .அடுத்தது நாபியா .கடைசி நாசிலா .நாபியா யாழ்ப்பாணத்திலுள்ள இராமநாதன் கல்லூரியில் உயர் பிரிவில் கல்வி பயின்று கொண்டிருந்தாள்.ஷரீபின் மனைவி நிஸ்மியா நல்ல குணமுடையவள்.என்றாலும் எல்லாவற்றிலும் ரொம்பக் கவனமாக இருப்பாள்.அவள் சிம்ராவை அழைத்துச் சொன்ன விஷயம் சிம்ராவுக்குப் பெரிய தலையிடியைத்  தந்தது. சிம்ரா இரவைக்கு நாங்க யாழ்ப்பாணத்துக்குப்  போகிறோம்.நீயும், நாசிலாவும் இருங்க.றிஸ்வான் அநேகமாக வரமாட்டான்.மட்டக்களப்பில்  தான் இருப்பான்.நாங்க மூன்று நாட்களில் வந்து விடுவோம் என்றான்.சிம்ரா பொம்மையாகத் தலையாட்டினாள்.அவர்கள் யாழ்ப்பாணத்துக்குப் போய் விட முன் சிம்ராவுக்கு நிறைய வேலை வைத்துவிட்டுப் போனார்கள். சிம்ராவின் மனதுக்குள் மெல்லிய ஏக்கம் படர்ந்தது.அது றிஸ்வானைப் பற்றியது.கொஞ்ச நாட்களாக றிஸ்வான் அவனைப் பார்க்கும் விதமே வேறாக இருந்தது.தெளிந்த நீரோடையாய் இருந்த அவளின் உள்ளத்தில் சலனக் கற்களை வீசி விட்டுக் குறும்பு பண்ணிக் கொண்டிருந்தான் றிஸ்வான்.வீட்டுக் காரர் இல்லாத நேரத்திலே றிஸ்வான் வராமலிருப்பது நல்லது என்று அவள் எண்ணிக் கொண்டிருந்தாள்.நாசிலாவுக்கு நேரத்துக்குச் சாப்பாடு கொடுத்து விட்டுத் தூங்க வைத்து விட்டாள். ட்ரிங்.....ட்ரிங்.....அழைப்பு மணி ஒலிக்கின்றது.யாராக இருக்கும்? சிம்ரவுக்குப் பயமாக இருந்தது.கதவைத் திறந்தவள் திகைத்துப் போனாள். றிஸ்வான் புன்னகையோடு உள்ளே நுழைந்தான்.நீங்க வரமாட்டீங்கன்னு சிம்ரா அவனைப் பார்த்து தடுமாறிக் கேட்டாள்.பயந்துட்டியே சிம்ரா....மம்மிகிட்ட அப்படிச் சொன்னேன் உன்னைப் பார்க்கனும்னு ஆசை வாறதே ;என் வீடு இது வருவேன் போவேன் நீ எதுக்குப் பயப்படனும்; றிஸ்வானின் பேச்சுக்குப் பதில் சொல்லாமல் அவனுக்குச் சாப்பாடு எடுத்து வைத்தார்.சாப்பாடு வச்சிருக்கேன் மேசையிலே சாப்பிடுங்க.என்றால் சிம்ரா;உடையை மாற்றிக் கொண்டு சாப்பிட அமர்ந்த றிஸ்வான் எங்கே நாசிலா என்று கேட்டான்.அவள் தூங்கி விட்டாள் என்று சொல்லிக் கொண்டு சிம்ரா அவசரமாக உள்ளே சென்று விட்டாள்; ஏய்.....ஏய் எங்கே ஓடறே சிம்ரா' என்று எழுந் றிஸ்வான் அவள் கைகளைப் பற்றி விழிகளை நோக்கினான். விடுங்க  றிஸ்வான்.இது ரொம்பத்  தப்பு கண்களில் நீர் மல்க சிம்ரா சொன்னாள்.சிம்ரா   என்கூட சாப்பிடுறியா என்று அவன் சின்னப் பிள்ளையைப் போல கேட்டான்.சிம்ராவுக்கு எதுவும்  பேச முடியாமல் உடம்பு ஆடியது.வேண்டாங்க நீங்க வர மாட்டிங்கன்னு தானே உங்க மம்மி சொன்னாங்க.எனக்குப் பயமா இருக்கே என்று மறுத்தாள்.றிஸ்வான் விடவில்லை,அவள் முடிந்தவரை மறுத்தும் பலனில்லாமல் போய் விடவே அவனோடு சாப்பிட்டால் சிம்ரா.நான் உங்களையே திருமணம் செஞ்சிக்கிறதா முடிவு பண்ணிட்டேன்.நீங்க என்ன பதில் ? என்று கேட்டான் றிஸ்வான்.அவள் மெளனமாக சாப்பிட்டுவிட்டு மேசையைத் துப்பரவு செய்வதில் முனைந்தாள்.பதில் பேசவேயில்லை.அதெல்லாம் அப்புறமாக செய்யலாம்.சிம்ரா இங்கே வா.ஒரு முக்கிய விஷயம் பேச வேண்டும் என்று ஜாடை செய்தான்.சிம்ராவுக்குப் பெரிய தொல்லையாகி விட்டது.ஆமாம் அன்புத் தொல்லை யாகிவிட்டது. அவன் எதிர்பாராமல் ஒரு ரூமிற்குள் சென்று கதவை மூடி விட்டு உள்ளே இருந்து விடலாம் என்று நினைத்தவள் ரூமை நோக்கி விரைவாகச் சென்றால். அதற்கிடையில்  றிஸ்வானும் பின் தொடர்ந்து சென்று ரூம் கதவை அடைத்து விட்டு பெரிதாகச் சிரித்தான் .என்னை ஏமார்த்தப் பார்த்தீங்க இல்ல. இப்ப எப்படி? றிஸ்வான் அந்த வேகத்தில் அவளை மார்போடு அணைத்தான்.அவன் சிணுங்கினாள் , நெளிந்தாள், விடுங்க றிஸ்வான் என்று சொல்லத்  தோன்றியும் சொல்லாமல் தோன்றியும் சொல்லாமல் அனுபவித்தாள்.நீங்க என்னை மனைவியா அடைய உங்க மம்மி விடு வாங்களா? டடி விடுவாரா? என்று கேட்டாள் சிம்ரா.'அதெல்லாம் சமாளிச்சிடலாம்.சிம்ரா' என்று அவன் குழைந்தான்.றிஸ்வான் ஒரு கன்னிப் பூவில் காளை வண்டு தனிமையிலிருந்தால் சங்கமம் கொள்வது சகஜம் . ஆனாலும் நீங்கள் உங்கள் தகுதிக்கேற்ற பூவை நாடிச் செல்லுங்கள்.அப்போ நான் தென்றலாய் என்றுமே மனம் வீசுவேன்.என்னைத் தயவு செய்து பின் தொடராதீர்கள்.எமது இளமைத் துடிப்பில் நாம் இருவரும் ஓர் முடிவு எடுத்தாலும் அதனுடைய பின் விளைவுகள் என்ன ஆகும்னு யோசிக்க வேண்டும் என்றால் சிம்ரா.ரிஸ்வான் சிம்ராவைப் பார்த்து 'முதல்லே'முன் விதைப்பதை நல்ல விதைத்திடுவோம்.பிறகு தான் பின் விளைவுகள் அறுவடை நன்றாக இருந்தாள் நிச்சயம் வீட்டார் மகிழ்ச்சியடைவார்க'ளென்று' சொன்னான்.அவனது வார்த்தைகளிலிருந்த உறுதியும்,இறுக்கமும் சிம்ராவின் இதயத்தில் உருண்டு கொண்டிருந்த ஒரு மெல்லிய பயத்தைத் தொட்டுத் துடைத்தது. 'றிஸ்வான் நீங்க நிச்சயம் எண்ணைக் கண் கலங்காம வாழ வைப்பீர்கள்.ஆனாலும் நான் உண்ட உணவுக்காவது சரி துரோகம் செய்யக் கூடாது தானே....ஓர் ஏழை என்ற வேற்றுமையே இல்லாது பாதுகாத்து வளர்த்த உங்கள் வீட்டாருக்கு நான் வேதனையை ஏற்படுத்தக் கூடாதே; அவர்கள் என்னை மனதார வெறுத்து விட்டால் என் மனம் நிம்மதியை ஒரு நாளும் அடையாது' கூறினாள்.'சிம்ரா பணத்தோடு பணம்  சேரும் குணத்தோடு குணம் சேரும் .உங்களிடம் பணம் இல்லை என்பது உண்மை.ஆனால் குணம் இருக்கின்றது.அதனால் குணத்தோடு குணம் சேர்வதில் தப்பில்லையே; என்னைப் போன்ற பணக்கார ஆண்கள் உங்களைப் போன்ற ஏழைகளைக் கரம் பிடித்தால் நிச்சயம் எமது சமுதாயத்தில் வரதட்சணை என்ற தொற்று நோய் பரவவே மாட்டாது.ஏழைக் கன்னிகள் கண்ணீர் வடிக்க வேண்டியது வேண்டிய நிலை ஏற்படாது.எமது திருமணம் ஏனையோருக்கு ஓர் படிப்பாக அமையலாம்'என்று கூறினான் றிஸ்வான்.நேரம் நகர்ந்தது;தன்னை விடுவித்துக் கொண்டு சிம்ரா எதிர்காலக் கற்பனையில் மூழ்கினாள். றிஸ்வான் எப்படியும் தன்னைக் கைவிட மாட்டார் என்று நம்பினாள்;றிஸ்வான் பெற்றோர் வரும் நேரமறிந்து  வெளியேறிவிட்டான். டாக்டரும் மனைவியும் அவர்கள் மகளும் வந்திருந்தனர்.வீடு அமர்க்களப்பட்டது;சிம்ராவுக்கு மனம் குறுகுறுத்தது.பெரிய தப்புப் பண்ணிவிட்டதை நினைத்து மனதுக்குள் அழுதால்.எப்படியும் றிஸ்வான் கைவிடமாட்டார் என்று நம்பினாள்.வாரம் ஓன்று கடந்தது;ரிஸ்வானைத் தனிமையில் கண்ட சிம்ரா எப்படி மம்மியிடம் சொல்வீர்கள் என்று கேட்டாள்.றிஸ்வான் சொன்னான்;மம்மிகிட்ட சொன்னா இது நடக்கவே நடக்காது. நிச்சயமா நான் உன்ன ஏமாத்தமாட்டேன்.அதனால நான் சொல்றபடி நீ செய்யனும், செய்வியா என்றான்.அவன் சொன்னது பார தூரமானதெனத் தெரிந்ததும் சிம்ரா பேசா மடந்தையானாள் .இருவரும் ஒரு முடிவுடன் பிரிந்தனர்.அடுத்த நாள் காலை வீடு வெறிச்சோடிக் கிடந்தது "சிம்ரா....சிம்ரா" எஜமானி கூப்பிட்டாள்.சிம்ரா வீட்டில் இருந்தால்தானே  வருவதற்கு ,நிஸ்மியாவுக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது.றிஸ்வான்  என்று கூப்பிட்டுக் கத்தினாள்.சிம்ரா எங்கே என்று கேட்டாள்.பதில் சொல்வதற்கு றிஸ்வான்  வேண்டுமே ,கனநேரப் போராட்டத்துக்குப்   பின் றிஸ்வானின் ரூமிற்குள் அந்தக் கடிதத்தைக் கண்டாள்."மம்மியும் டடியும் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்.நான் சிம்ராவை திருமணம் செய்து கொள்ள விரும்பி அழைத்து வந்து விட்டேன் .இப்படிக்கு றிஸ்வான்.டாக்டரும் மனைவியும் ஆளையாள் பார்த்து முழித்தார்கள்.டாக்டர் ஷரீப் எப்போதுமே இளகிய மனம் கொண்டவரல்'இவன் இத முதலே சொல்லியிருக்கலா மில்ல.இது அவமானமாச்சே,ஓடிட்டானம் என்கிற பேர், அதுவும் வேலைக்காரியோட ஏற்கனவே தெரிஞ்சா கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்கலாம்'என்று ஓரளவு தன்னையே சமாதானம் பண்ணி மனைவியிடம் சொன்னார்.இப்போது அவன் இருக்கும் இடத்தைக் கண்டு பிடித்து இருவருமாக அங்கே செல்வதெனத் தீர்மானமாயிற்று.அதன் பின்னர் அந்த யோசனைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப் பட்டு விட்டது.ஓடிப் போனவன் போகட்டும் என்கிற எண்ணம் வளர்ந்தது.ஆனால் நிஸ்மியாவின் உள்ளம் தன் கண்ணே பொண்ணே என்ற ஒரே ஒரு தன் செல்லமகனை எண்ணி ஏங்கியது.காலம் கரைந்தது - வருஷமும் இரண்டாயிற்று.டாக்டர் ஷரீபின் வீட்டில் டெலிபோன் ஒலித்தது.யாரது....ஹலோ நான் மிஸிஸ் ஷரீப் பேசறான் என்றால் நிஸ்மியா. 'மம்மி நான்...நான் றிஸ்வான் மம்மி டடா எங்க?' றிஸ்வான் எப்படி மகன் சுகமா? சிம்ரா எங்கே...நீ இப்பவே வாடா உன்னைப் பார்க்கத் துடிக்கிறேன் என்று படபடத்தாள்.'சிம்ரா வரப் பயப்படுகிறா மம்மி என்றான் றிஸ்வான்.ஒன்னுமே.... ஆகாதுடா டடா கூட உன்னைக் கோபிக்க மாட்டார்.இங்கேயே வந்திடு" என்றால் அந்தப் பாசமிக்க தாய்.'மம்மி இப்ப யார் பேசுறது சொல்லுங்க என்றான்.டடாம்மா  ட....தாம்மா வாங்க சின்னக் குரல் ஒலித்தது.அடடே பேரன் எனக்கு இருக்கான். இதோ நானே வந்துடறேன் என்று பேசி முடித்துவிட்டு அவன் விலாசத்தைப் பெற்று குடும்பமாக மகனின்;வீட்டுக்குப் போனார்கள்.சிம்ரா மாமியை கட்டிப் பிடித்து அழுத்து மன்னிப்பு வேண்டினாள்.மருமகளை அணைத்து முத்தமிட்டபடி நல்ல இதயம் கொண்ட மாமி....வீடு நோக்கி விரைந்து கொண்டிருந்தாள்.சிம்ராவின் உள்ளம் குளிர்ந்து.றிஸ்வான் அவள் காதோடு எதோ குசுகுசுத்தான்.சிம்ரா நாணத்துடன் முகம் சிவந்தாள்.அவனுக்கு மகிழ்ச்சி. கார் வீடு நோக்கி விரைந்து கொண்டிருந்தது.