ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

கன்னிப் பூவில் காளை வண்டு !!!

றிஸ்வானின்  அழகிய விரல்கள் டைப்ரைட்டருடன் உறவாடிக் கொண்டிருந்தன. மேலே சுழன்ற மின் விசிறியின் செயற்கைக் காற்று அவன் அலை போன்ற கேசத்தைத் தழுவி மேலும் அழகு படுத்தினாற் போல் பறக்க விட்டுக் கொண்டிருந்தது.பக்கத்திலே அவனின் தங்கை நாசிலா குறும்பு பண்ணிக் கொண்டிருந்தாள்.அவசரமான ஒரு கடிதம் ஒன்றை ரிஸ்வான் டைப் செய்து கொண்டிருந்தான். றிஸ்வானின் வேலையைக் குழப்பிக் கொண்டிருந்த நாசிலாவை சிம்ரா ஓடிப் போய் அணைத்துக் கொண்டாள்.நாசிலாவும் அடம்பிடிக்காமல் சிம்ராவோடு ஒட்டிக் கொண்டாள்.அட சிம்ராவா; குழந்தையை அழகாத் தூக்குறியே என்று புன்னகையோடு சொன்னான் றிஸ்வான்.அவனின் அழகிய புன்னகையில் சில நிமிஷம் தன்னையிழன்தவள் ......... இது பெரிய வித்தையா ? பிள்ளையைத் தூக்கத் தெரியாத ஒரு பெண் இருக்க முடியுமா? என்று கூறிவிட்டு உள்ளே சென்று விட்டாள்.சிம்ராவின் அழகான பின்னழகை ரசித்த றிஸ்வான் மீண்டும் வேளையில் மும்முரமானான். றிஸ்வான் டாக்டர் ஷரீபின் ஒரே மகன்.படித்து விட்டு எப்படியெல்லாமோ பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தான். தந்தையிடம் இருக்கும் ஏராளமான சொத்துக்கள் அவன் படிக்கத்தான் வேண்டும் என்ற கொள்கையை மாற்றியது.உத்தியோகம் ,புருசலட்சணம் என்ற இலக்கணத்தைத் தொலைத்து விட்டு வீட்டில் றிஸ்வானோடு தந்தைக்கு கோபம் வராவிட்டாலும் அவன் படித்து ஒரு உத்தியோகம் பார்க்கவில்லையே என்று உள்ளூரக் கவலையாயிருந்து. படித்தவர்களின் பிள்ளைகள் படிப்பதில்லை. இது பல இடத்து நிகழ்வுகள் பணக்கார இடங்களில் செல்வம் அதிகமாகிப் பிள்ளைகள் வழி தவறி விடுவதுண்டு.ஆனாலும் றிஸ்வான் எதோ உருப்படியான வேலைகள் செய்து பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தான். அவனுக்கென்று ஏராளமான சொத்துக்களும் அவன் பெயரில் பெரிய கம்பனி ஒன்றுமிருந்தது.சிம்ரா டாக்டர் ஷரீப் வீட்டு வேலைக்காரப் பெண் . சின்ன வயதிலிருந்தே  அங்குதான்  இருக்கிறாள்.அந்தக் குடும்பத்தில் அவள் வேலைக் காரியாக இருந்தாலும் அன்பாக நடாத்தப்பட்டாள்.தாய்,தந்தை இருக்கிறார்களா இல்லையா என்பது கூட அவளுக்குத் தெரியாது.சொல்லப் போனால் அவர்கள் உருவமே அவள் நினைவில் இல்லை.சிம்ரா;சிம்ரா ஷரீபின் மனைவி அழைத்த ஒலி கேட்டு விரைந்து சென்றாள்.டாக்டருக்கு மூன்று குழந்தைகள். மூத்தவன் றிஸ்வான் .அடுத்தது நாபியா .கடைசி நாசிலா .நாபியா யாழ்ப்பாணத்திலுள்ள இராமநாதன் கல்லூரியில் உயர் பிரிவில் கல்வி பயின்று கொண்டிருந்தாள்.ஷரீபின் மனைவி நிஸ்மியா நல்ல குணமுடையவள்.என்றாலும் எல்லாவற்றிலும் ரொம்பக் கவனமாக இருப்பாள்.அவள் சிம்ராவை அழைத்துச் சொன்ன விஷயம் சிம்ராவுக்குப் பெரிய தலையிடியைத்  தந்தது. சிம்ரா இரவைக்கு நாங்க யாழ்ப்பாணத்துக்குப்  போகிறோம்.நீயும், நாசிலாவும் இருங்க.றிஸ்வான் அநேகமாக வரமாட்டான்.மட்டக்களப்பில்  தான் இருப்பான்.நாங்க மூன்று நாட்களில் வந்து விடுவோம் என்றான்.சிம்ரா பொம்மையாகத் தலையாட்டினாள்.அவர்கள் யாழ்ப்பாணத்துக்குப் போய் விட முன் சிம்ராவுக்கு நிறைய வேலை வைத்துவிட்டுப் போனார்கள். சிம்ராவின் மனதுக்குள் மெல்லிய ஏக்கம் படர்ந்தது.அது றிஸ்வானைப் பற்றியது.கொஞ்ச நாட்களாக றிஸ்வான் அவனைப் பார்க்கும் விதமே வேறாக இருந்தது.தெளிந்த நீரோடையாய் இருந்த அவளின் உள்ளத்தில் சலனக் கற்களை வீசி விட்டுக் குறும்பு பண்ணிக் கொண்டிருந்தான் றிஸ்வான்.வீட்டுக் காரர் இல்லாத நேரத்திலே றிஸ்வான் வராமலிருப்பது நல்லது என்று அவள் எண்ணிக் கொண்டிருந்தாள்.நாசிலாவுக்கு நேரத்துக்குச் சாப்பாடு கொடுத்து விட்டுத் தூங்க வைத்து விட்டாள். ட்ரிங்.....ட்ரிங்.....அழைப்பு மணி ஒலிக்கின்றது.யாராக இருக்கும்? சிம்ரவுக்குப் பயமாக இருந்தது.கதவைத் திறந்தவள் திகைத்துப் போனாள். றிஸ்வான் புன்னகையோடு உள்ளே நுழைந்தான்.நீங்க வரமாட்டீங்கன்னு சிம்ரா அவனைப் பார்த்து தடுமாறிக் கேட்டாள்.பயந்துட்டியே சிம்ரா....மம்மிகிட்ட அப்படிச் சொன்னேன் உன்னைப் பார்க்கனும்னு ஆசை வாறதே ;என் வீடு இது வருவேன் போவேன் நீ எதுக்குப் பயப்படனும்; றிஸ்வானின் பேச்சுக்குப் பதில் சொல்லாமல் அவனுக்குச் சாப்பாடு எடுத்து வைத்தார்.சாப்பாடு வச்சிருக்கேன் மேசையிலே சாப்பிடுங்க.என்றால் சிம்ரா;உடையை மாற்றிக் கொண்டு சாப்பிட அமர்ந்த றிஸ்வான் எங்கே நாசிலா என்று கேட்டான்.அவள் தூங்கி விட்டாள் என்று சொல்லிக் கொண்டு சிம்ரா அவசரமாக உள்ளே சென்று விட்டாள்; ஏய்.....ஏய் எங்கே ஓடறே சிம்ரா' என்று எழுந் றிஸ்வான் அவள் கைகளைப் பற்றி விழிகளை நோக்கினான். விடுங்க  றிஸ்வான்.இது ரொம்பத்  தப்பு கண்களில் நீர் மல்க சிம்ரா சொன்னாள்.சிம்ரா   என்கூட சாப்பிடுறியா என்று அவன் சின்னப் பிள்ளையைப் போல கேட்டான்.சிம்ராவுக்கு எதுவும்  பேச முடியாமல் உடம்பு ஆடியது.வேண்டாங்க நீங்க வர மாட்டிங்கன்னு தானே உங்க மம்மி சொன்னாங்க.எனக்குப் பயமா இருக்கே என்று மறுத்தாள்.றிஸ்வான் விடவில்லை,அவள் முடிந்தவரை மறுத்தும் பலனில்லாமல் போய் விடவே அவனோடு சாப்பிட்டால் சிம்ரா.நான் உங்களையே திருமணம் செஞ்சிக்கிறதா முடிவு பண்ணிட்டேன்.நீங்க என்ன பதில் ? என்று கேட்டான் றிஸ்வான்.அவள் மெளனமாக சாப்பிட்டுவிட்டு மேசையைத் துப்பரவு செய்வதில் முனைந்தாள்.பதில் பேசவேயில்லை.அதெல்லாம் அப்புறமாக செய்யலாம்.சிம்ரா இங்கே வா.ஒரு முக்கிய விஷயம் பேச வேண்டும் என்று ஜாடை செய்தான்.சிம்ராவுக்குப் பெரிய தொல்லையாகி விட்டது.ஆமாம் அன்புத் தொல்லை யாகிவிட்டது. அவன் எதிர்பாராமல் ஒரு ரூமிற்குள் சென்று கதவை மூடி விட்டு உள்ளே இருந்து விடலாம் என்று நினைத்தவள் ரூமை நோக்கி விரைவாகச் சென்றால். அதற்கிடையில்  றிஸ்வானும் பின் தொடர்ந்து சென்று ரூம் கதவை அடைத்து விட்டு பெரிதாகச் சிரித்தான் .என்னை ஏமார்த்தப் பார்த்தீங்க இல்ல. இப்ப எப்படி? றிஸ்வான் அந்த வேகத்தில் அவளை மார்போடு அணைத்தான்.அவன் சிணுங்கினாள் , நெளிந்தாள், விடுங்க றிஸ்வான் என்று சொல்லத்  தோன்றியும் சொல்லாமல் தோன்றியும் சொல்லாமல் அனுபவித்தாள்.நீங்க என்னை மனைவியா அடைய உங்க மம்மி விடு வாங்களா? டடி விடுவாரா? என்று கேட்டாள் சிம்ரா.'அதெல்லாம் சமாளிச்சிடலாம்.சிம்ரா' என்று அவன் குழைந்தான்.றிஸ்வான் ஒரு கன்னிப் பூவில் காளை வண்டு தனிமையிலிருந்தால் சங்கமம் கொள்வது சகஜம் . ஆனாலும் நீங்கள் உங்கள் தகுதிக்கேற்ற பூவை நாடிச் செல்லுங்கள்.அப்போ நான் தென்றலாய் என்றுமே மனம் வீசுவேன்.என்னைத் தயவு செய்து பின் தொடராதீர்கள்.எமது இளமைத் துடிப்பில் நாம் இருவரும் ஓர் முடிவு எடுத்தாலும் அதனுடைய பின் விளைவுகள் என்ன ஆகும்னு யோசிக்க வேண்டும் என்றால் சிம்ரா.ரிஸ்வான் சிம்ராவைப் பார்த்து 'முதல்லே'முன் விதைப்பதை நல்ல விதைத்திடுவோம்.பிறகு தான் பின் விளைவுகள் அறுவடை நன்றாக இருந்தாள் நிச்சயம் வீட்டார் மகிழ்ச்சியடைவார்க'ளென்று' சொன்னான்.அவனது வார்த்தைகளிலிருந்த உறுதியும்,இறுக்கமும் சிம்ராவின் இதயத்தில் உருண்டு கொண்டிருந்த ஒரு மெல்லிய பயத்தைத் தொட்டுத் துடைத்தது. 'றிஸ்வான் நீங்க நிச்சயம் எண்ணைக் கண் கலங்காம வாழ வைப்பீர்கள்.ஆனாலும் நான் உண்ட உணவுக்காவது சரி துரோகம் செய்யக் கூடாது தானே....ஓர் ஏழை என்ற வேற்றுமையே இல்லாது பாதுகாத்து வளர்த்த உங்கள் வீட்டாருக்கு நான் வேதனையை ஏற்படுத்தக் கூடாதே; அவர்கள் என்னை மனதார வெறுத்து விட்டால் என் மனம் நிம்மதியை ஒரு நாளும் அடையாது' கூறினாள்.'சிம்ரா பணத்தோடு பணம்  சேரும் குணத்தோடு குணம் சேரும் .உங்களிடம் பணம் இல்லை என்பது உண்மை.ஆனால் குணம் இருக்கின்றது.அதனால் குணத்தோடு குணம் சேர்வதில் தப்பில்லையே; என்னைப் போன்ற பணக்கார ஆண்கள் உங்களைப் போன்ற ஏழைகளைக் கரம் பிடித்தால் நிச்சயம் எமது சமுதாயத்தில் வரதட்சணை என்ற தொற்று நோய் பரவவே மாட்டாது.ஏழைக் கன்னிகள் கண்ணீர் வடிக்க வேண்டியது வேண்டிய நிலை ஏற்படாது.எமது திருமணம் ஏனையோருக்கு ஓர் படிப்பாக அமையலாம்'என்று கூறினான் றிஸ்வான்.நேரம் நகர்ந்தது;தன்னை விடுவித்துக் கொண்டு சிம்ரா எதிர்காலக் கற்பனையில் மூழ்கினாள். றிஸ்வான் எப்படியும் தன்னைக் கைவிட மாட்டார் என்று நம்பினாள்;றிஸ்வான் பெற்றோர் வரும் நேரமறிந்து  வெளியேறிவிட்டான். டாக்டரும் மனைவியும் அவர்கள் மகளும் வந்திருந்தனர்.வீடு அமர்க்களப்பட்டது;சிம்ராவுக்கு மனம் குறுகுறுத்தது.பெரிய தப்புப் பண்ணிவிட்டதை நினைத்து மனதுக்குள் அழுதால்.எப்படியும் றிஸ்வான் கைவிடமாட்டார் என்று நம்பினாள்.வாரம் ஓன்று கடந்தது;ரிஸ்வானைத் தனிமையில் கண்ட சிம்ரா எப்படி மம்மியிடம் சொல்வீர்கள் என்று கேட்டாள்.றிஸ்வான் சொன்னான்;மம்மிகிட்ட சொன்னா இது நடக்கவே நடக்காது. நிச்சயமா நான் உன்ன ஏமாத்தமாட்டேன்.அதனால நான் சொல்றபடி நீ செய்யனும், செய்வியா என்றான்.அவன் சொன்னது பார தூரமானதெனத் தெரிந்ததும் சிம்ரா பேசா மடந்தையானாள் .இருவரும் ஒரு முடிவுடன் பிரிந்தனர்.அடுத்த நாள் காலை வீடு வெறிச்சோடிக் கிடந்தது "சிம்ரா....சிம்ரா" எஜமானி கூப்பிட்டாள்.சிம்ரா வீட்டில் இருந்தால்தானே  வருவதற்கு ,நிஸ்மியாவுக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது.றிஸ்வான்  என்று கூப்பிட்டுக் கத்தினாள்.சிம்ரா எங்கே என்று கேட்டாள்.பதில் சொல்வதற்கு றிஸ்வான்  வேண்டுமே ,கனநேரப் போராட்டத்துக்குப்   பின் றிஸ்வானின் ரூமிற்குள் அந்தக் கடிதத்தைக் கண்டாள்."மம்மியும் டடியும் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்.நான் சிம்ராவை திருமணம் செய்து கொள்ள விரும்பி அழைத்து வந்து விட்டேன் .இப்படிக்கு றிஸ்வான்.டாக்டரும் மனைவியும் ஆளையாள் பார்த்து முழித்தார்கள்.டாக்டர் ஷரீப் எப்போதுமே இளகிய மனம் கொண்டவரல்'இவன் இத முதலே சொல்லியிருக்கலா மில்ல.இது அவமானமாச்சே,ஓடிட்டானம் என்கிற பேர், அதுவும் வேலைக்காரியோட ஏற்கனவே தெரிஞ்சா கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்கலாம்'என்று ஓரளவு தன்னையே சமாதானம் பண்ணி மனைவியிடம் சொன்னார்.இப்போது அவன் இருக்கும் இடத்தைக் கண்டு பிடித்து இருவருமாக அங்கே செல்வதெனத் தீர்மானமாயிற்று.அதன் பின்னர் அந்த யோசனைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப் பட்டு விட்டது.ஓடிப் போனவன் போகட்டும் என்கிற எண்ணம் வளர்ந்தது.ஆனால் நிஸ்மியாவின் உள்ளம் தன் கண்ணே பொண்ணே என்ற ஒரே ஒரு தன் செல்லமகனை எண்ணி ஏங்கியது.காலம் கரைந்தது - வருஷமும் இரண்டாயிற்று.டாக்டர் ஷரீபின் வீட்டில் டெலிபோன் ஒலித்தது.யாரது....ஹலோ நான் மிஸிஸ் ஷரீப் பேசறான் என்றால் நிஸ்மியா. 'மம்மி நான்...நான் றிஸ்வான் மம்மி டடா எங்க?' றிஸ்வான் எப்படி மகன் சுகமா? சிம்ரா எங்கே...நீ இப்பவே வாடா உன்னைப் பார்க்கத் துடிக்கிறேன் என்று படபடத்தாள்.'சிம்ரா வரப் பயப்படுகிறா மம்மி என்றான் றிஸ்வான்.ஒன்னுமே.... ஆகாதுடா டடா கூட உன்னைக் கோபிக்க மாட்டார்.இங்கேயே வந்திடு" என்றால் அந்தப் பாசமிக்க தாய்.'மம்மி இப்ப யார் பேசுறது சொல்லுங்க என்றான்.டடாம்மா  ட....தாம்மா வாங்க சின்னக் குரல் ஒலித்தது.அடடே பேரன் எனக்கு இருக்கான். இதோ நானே வந்துடறேன் என்று பேசி முடித்துவிட்டு அவன் விலாசத்தைப் பெற்று குடும்பமாக மகனின்;வீட்டுக்குப் போனார்கள்.சிம்ரா மாமியை கட்டிப் பிடித்து அழுத்து மன்னிப்பு வேண்டினாள்.மருமகளை அணைத்து முத்தமிட்டபடி நல்ல இதயம் கொண்ட மாமி....வீடு நோக்கி விரைந்து கொண்டிருந்தாள்.சிம்ராவின் உள்ளம் குளிர்ந்து.றிஸ்வான் அவள் காதோடு எதோ குசுகுசுத்தான்.சிம்ரா நாணத்துடன் முகம் சிவந்தாள்.அவனுக்கு மகிழ்ச்சி. கார் வீடு நோக்கி விரைந்து கொண்டிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக