செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

வாழ்கை மலர்கிறது..........!

டொக்........டொக்.........சத்தம் சிபாவுக்கு நாதமாக ஒலித்ததுக் கொண்டிருந்தது.அவள் மெதுவாக பின் ஹோல் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தாள்.அங்கே முற்றத்து வளவில் சியானும்,சில்மியும் வெட்மீட்டர் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்.அதிகமாக காற்றும் வீசுவதால் செட்டிக் கொக் பல திசைகளிலும் பறந்து விழுவதால் சியானுக்கு கோபத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.கோபம் நிறைந்தவாறு பற்களை கடித்துக் கொண்டே பாய்ந்து ஓடி ஓடி அடிக்கிறான்.மெதுவாக அடியுங்கள் என்ற சத்தத்தில் சியான் திரும்பிப் பார்க்கிறான்.அங்கே சிபா அழகான புன்னைகையுடன் கதவின் மேல் கை வைத்த படி பார்த்துக் கொண்டிருந்தாள்.ஓ...என்ன இங்கு பார்த்துக் கொண்டிருக்கிறீங்க விளையாடுங்களேன்.யார் வெற்றி பெறுகின்றீர்கள் என்று பார்ப்போம்.சிரித்தபடியே சொல்லிவிடுகின்றாள்."என்ன சொல்கின்றீங்க இவ பெரிய மத்தியஸ்தராட்டம்"நான் எதிலும் மத்தியஸ்தானே,நீங்கள் சியான்...என்று இன்னும் எதோ சொல்லப் போனவள்.சிபா எனும் அழைப்புக் கேட்டு சியானின் தாய் சில்மியாவிடம் விரைந்து சென்றாள்.சிபாவுக்கு பதின் ஆறு வயதிருக்கலாம்.வறுமையின் கொடூரப் பிடியில் சிக்கித் தவித்து தன் வயிற்றுப் பசியை போக்க கியாஸ் முதலாளியின் வீட்டில் பணிப்பெண்ணாக சுமார் பத்து வருடகாலமாக வேலை  பார்க்கிறாள்.அவளின் ஏழைத் தாய் இருந்து இருந்து இரண்டு மூன்று மாதத்துக்கு ஒரு முறை வந்து கியாஸ் முதலாளியிடம் நூறு,இருநூறு வாங்கிக் கொண்டு போவாள்.இதுதான் சிபாவின் சம்பளம்.அவள் வேளைக்கு வந்தபின் பிறந்தவள் தான் கியாஸ் முதலாளியின் மகள் சிறீன்.இப்போது அவசி கூட ஒரு ஆண்குழந்தைக்கு தாயாகிவிட்டாள்.ஆனால் சிபா...?கியாஸ் முதலாளியை அப்பா...என்றும் சிபாவை அண்டி என்றும் அக்குழந்தை செல்ல மொழியில் பேசும் போது சிபாவின் ஆசை அபிலாசைகள் கற்பனையில் தஞ்சமடையும்.நானும் ஒரு செல்வந்தரின் மகளாயிருந்தால் இந்த நிலைக்கு தானே இருப்பேன்....ம்.........ஏழையாகப் பிறந்ததால் தானே இப்படி..........?எல்லா பெண்களுக்கும் குமரிப் பருவத்தில் ஆசைகள் இருக்காதா? ஏழை சிபா ஆசையற்றவளா? உணர்ச்சியற்றவலா?கியாஸ் ஹாஜியாரின் மகளது நிலைமை கண்டு பேறு மூச்சுக்கள் விடுவாள்.பெண்ணாகப் பிறந்தாலும் ஏழையாக என்னைப்போல் யாருமே பிறக்ககூடாது என்று அவளுள்ளம் பிரார்த்தனை புரியும்.அதே நேரம் சீதனத்தை நினைத்தாள்.அவளுள்ளம் மெழுகு போல், உருகி வடியும்.இந்த  நிலையில் அவளது  வாழ்கையில் கூட விரக்தியான மனோபாவமே ஏற்பட்டது.தற்போது நான் சியானின் பாசம் சிபாவின் பக்கம் திரும்பி அவளுள்ளத்தில் இன்பத்தை மாற்றி தூய அன்பின் உறவை ஏற்படுத்திவிட்டது.அவனின் பதவி அவளுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியது."சிபா, சிபா " என்ற சியானின்  குரலைக் கேட்ட சிபா,என்னங்க அழைத்தீர்களா?என புன்முறுவலுடன் கேட்டாள்.ஆம்,"கொஞ்சம் தண்ணீர் கொண்டு தாங்கோ "என்றான்.தண்ணீரை வாங்கி குடுத்து விட்டு சியான் வழமை போல் ஒப்பிஸுக்கு போய் விட்டார்.சிபா குசினிக்குள் வேலை  செய்து கொண்டிருந்தாள்.'எய் சிவா இங்கு வாடி'நான் அடுத்த வீட்டு மாமிக்கு சொன்னேன் அவ இரவைக்கு இங்கு வந்து உமக்குத் துணையாக இருப்பா.சியான் மகன் வந்தால் அவரையும் மாமா வீட்டுக்கு கட்டாயமாக வரச் சொல்லு நாங்க போய் வருவீனம்.வீட்டில் இருங்க மகள் என்று சொல்லிவிட்டு காரின் கதவ மூடினாள்.கார்,முதலாளியையும்,மனைவி,மக்களை ஏற்றிக் கொண்டு விரைந்து சென்றது.நேரம் இரவு 09 மணி,இன்னும் சியான் வீட்டுக்கு வரவில்லை.இப்படி தாமதிப்பதில்லையே.சிபா கற்பனை செய்த படி கதவருகில் அமர்ந்து கொண்டு தன் பார்வை செல்லும் வரை சியானின் வரவை எதிர்ப்பார்த்திருந்தாள்.அடுத்த வீட்டு மாமியோ கும்பகர்ணன் போல் கொரட்டை விட்டு நிம்மதியாக அருகில் இருந்த வெட்டில் படுத்துக் கொண்டார்.சியான் காரை கராஜில் நிறுத்தி விட்டு மெதுவாகப் போய் சிபா என்று அழைத்தான்.ஓ....என்ன இவ்வளவு தாமதம் என்றபடி எழுந்து நின்றாள்.இன்று தாமதிக்க வேண்டிய நிலை வந்து விட்டது என்று அன்புடனே கூறிய படி சிபா கொஞ்சம் வெளியே வாங்களேன் என்றான் .அவள் ஏன்.....?என்று கேட்க பயப்படாதீங்க சிபா சற்று கராஜிக்கிட்ட வாங்களேன் என்று பரிதாபமாக அழைத்தான் .அவளும் அழைப்பை ஏற்றுக் கொண்டு சென்றாள்."சிபா நான் இன்று உங்களை அழைத்துச் செல்லப் போகிறேன்.என்னுடன் வரத் தயார் தானே......உங்களை கடைசி வரையும் என்னால் காப்பாற்ற முடியும் சிபா வாங்க நாம் போய் முறைப் படி திருமணம் செய்து கொள்வோம்"என்றான் சியான்."சியான்,உங்கள கெஞ்சிக் கேட்கின்றேன்.உம்மா உங்களை வரச் சொன்னார்.போயிடுங்கோ அவள் கெஞ்சுகிறாள்.உங்களுக்கு கொடுத்த சீதனங்களுடன் மாமா மகளைத் திருமணம் பேசித்தானே போயுள்ளார்.இந்த ஏழையை நீங்க முடித்தாள் பின்னுக்கு வீண் பழிகள் கோன்றாலும் சியான் போங்க....சிபா இங்கு பாருங்க;நான் பணம் அந்தஸ்த்தை நாட வில்லை.உங்களைப் போன்ற ஏழையைத்தான்  நான் விரும்புகின்றேன்.எனது பெற்றோர் பணத்தோடு தன் பணத்தை சேர்க்கப் பார்ப்பார்கள் இப் பணம் எல்லாம் நிலையற்றது.என் பெற்றோர் சீதனப் பேய்கள்.நீங்க என்னுடன் வர வேண்டும்.உங்களைத் திருமணம் செய்வதன் மூலம் தான் என் பெற்றோரது வரதட்சனை கொள்கைகளை முறியடிக்க முடியும் என்றான் சியான்.இரவோடு இரவாக சியான் சிபாவை அழைத்துச் சென்று மார்க்கப்படி திருமணம் செய்து கொண்டான்.திருமணம் பேசி சென்ற கியாஸ் தம்பதிகள் வீடு வந்து அதிர்ச்சியடைந்து விட்டார்கள்.கியாஸ் முதலாளி மதம் பிடித்த யானையைப் போல் இங்கும் அங்குமாக நடையின்று கொண்டிருந்தார்.முதலாளியின் மனைவியோ வாய்க்கு வந்த படி உளறுகின்றாள்.சீ எம் வீட்டு வேலைக்காரியை மனைவியாக்கி விட்டானே.....எமது பணம் என்ன...? நினைத்து நினைத்து கவலை கொண்டாள்.ஊர் எங்கும் சியானின் புகழ் பரவி விட்டது.ஏழைக் கன்னியை கரை சேர்த்து விட்டார்.சிபாவுக்கு நிம்மதியான வாழ்க்கையை சியான் கொடுத்து மனமகிழவைத்த தியாகியாகி விட்டார். இப்படி பல புகழ்கள்.சிபாவுக்கு சொல்லொணா மகிழ்ச்சி எனது வாழ்க்கையின் பெரிய பிரச்சினையொன்று இலேசாக தீர்ந்து விட்டது என்று,சியான்,சிபாவை கரம் பிடித்த வண்ணம் புது வாழ்வை நோக்கிய வாரே மலர்ந்து வதனத்துடன் இல்லற வாழ்க்கையில் இரு மலராகி விட்டார்கள்.ஆம்;இனி அவளுக்கு வறுமைக்கே இங்கு இடமில்லை.இவன் தான் உண்மையான உத்தமன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக